சென்னை,
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1987-ம் ஆண்டு பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தபோது, அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 13-வது திருத்தத்தால் தமிழர்களுக்கு கணிசமான உரிமைகள் பெறப்பட்டன. இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம் 13-வது திருத்தம் தான். தமிழர்களுக்கு எதிரான கடுமையான போக்கு கொண்ட ராஜபக்சே, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை அணி திரட்டுகிற முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார். இதனால், இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் ஏறத்தாழ 1 லட்சம் அகதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எதிர்காலம் குறித்து ஒரு செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் ராஜீவ்காந்தியின் முயற்சியால் 13-வது திருத்தத்தின் மூலம் பெற்ற உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பறிப்பதற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அண்டை நாடான இந்தியாவிற்கு இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் தீவிரகவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.