தமிழக செய்திகள்

'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை அ.தி.மு.க. சட்டரீதியாக எதிர்கொள்ளும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஒரு அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். பத்திரிக்கையில் வெளியான செய்தியின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை அ.தி.மு.க. சட்டரீதியாக எதிர்கொள்ளும்."

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை