தமிழக செய்திகள்

விவசாயி கொலையில் தலைமறைவான அண்ணனுக்கு வலைவீச்சு

பேரிகை அருகே விவசாயி கொலையில் தலைமறைவான அண்ணனுக்கு வலைவீச்சு.

தினத்தந்தி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கோட்டசாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). விவசாயி. இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில் சொத்து பிரச்சினை காரணமாக பாலாஜியை அவருடைய அண்ணன் தனஞ்செயன் (38) என்பவர் தாக்கி கொன்று வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் பாகலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களுருவுக்கு சென்று தனஞ்செயனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவருடைய உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து