தமிழக செய்திகள்

தற்கொலை செய்த ஆயுதப்படை காவலரின் உடலில் இருந்து வெளியேறிய தோட்டா எங்கே? போலீசார் விசாரணை

ஜெயலலிதா நினைவிடத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலரின் உடலில் இருந்து வெளியேறிய தோட்டா எங்கே என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Jayalalithaa

தினத்தந்தி

சென்னை,

சென்னை மெரீனாவில் அமைந்துள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரையை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் அருண்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இவ்விவகாரம் பற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த மெரீனா பகுதிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை போலீசாரின் உடலில் இருந்து வெளியேறிய தோட்டா காணவில்லை என கூறப்படுகிறது. காணாமல் போன தோட்டா எங்கே என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்