கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கதவு திறந்து ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்த நோயாளி

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்சின் பின்பக்க கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார்.

தினத்தந்தி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது.

அப்போது திடீரென ஆம்புலன்சில் பின்பக்க கதவு திறந்தது. மேலும் ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கூச்சலிட்டு ஆம்புலன்சை நிறுத்தினர். பின்னர் நோயாளியை மீட்டு அதே ஆம்புலன்சில் மீண்டும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வீடியோவாக பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்