தமிழக செய்திகள்

கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் பயப்படுகிறார்கள்? காங். எம்.எல்.ஏ செல்வபெருந்தகை கேள்வி

கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் பயப்படுகிறார்கள்? என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார்.

சென்னை,

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கோடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க தயார் இல்லை என்றால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயார். சயான், மனோஜ் ஆகிய இருவரும் ஏன் ஜாமினில் வெளியே வந்தார்கள்?

ஜாமினில் வெளியே வந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏன்? ஜெயக்குமார் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார். கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் பயப்படுகிறார்கள்? ராஜேஷ்குமார் நாவலைவிட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு