தமிழக செய்திகள்

தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்காத சுங்க சாவடிகளின் உரிமத்தினை ஏன் ரத்து செய்ய கூடாது? நீதிபதிகள் கேள்வி

தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்காத சுங்க சாவடிகளின் உரிமத்தினை ஏன் ரத்து செய்ய கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் பேருந்து சங்க நிர்வாகி மகாலிங்கம் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது.

இதில், தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்காத சுங்க சாவடிகளின் உரிமத்தினை ஏன் ரத்து செய்ய கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து, எதனையும் கண்டு கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலை தூங்குகிறது என கூறிய நீதிபதிகள், குண்டர்களை வைத்து சுங்க சாவடி நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன என்றும் சாடினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது