தமிழக செய்திகள்

செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? - எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்

வரும் செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் செப்டம்பரிலும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. அதையும் தமிழக அரசு கருத்தில் கொண்டுள்ளது. தற்போது இ-பாஸ் மற்றும் பொது போக்குவரத்து தொடர்பாக மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பொது போக்குவரத்தை மண்டலங்களுக்கு உள்ளேயாவது அரசு அனுமதிக்குமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதுபோல, இ-பாஸ் முறையில் தளர்வுகள் செய்யப்படுமா? அல்லது மத்திய அரசு உத்தரவிட்டதுபோல இ-பாஸ் முறை முற்றிலும் ரத்தாகுமா? என்ற எதிர்பார்ப்பிலும் மக்கள் உள்ளனர். இவற்றுக்கு விடையாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பு வெளியிடுகிறார். செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்க அதிக வாய்ப்புள்ள நிலையில், பல தளர்வுகள் நிச்சயமாக அறிவிக்கப்பட உள்ளன.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்