தமிழக செய்திகள்

நல்லம்பள்ளி அருகேபெண்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம்

தினத்தந்தி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அரசு பள்ளிக்கூடம் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு கிராம பெண்களிடம் ரகளை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடந்து வந்தன. இதனால் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இவ்வாறு கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நல்லம்பள்ளி அருகே உள்ள டாடா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் வடக்கு தெரு கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து