தமிழக செய்திகள்

"ஆக்கிரமிப்புகளால் மீண்டும் சென்னையில் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு"- நித்யானந்த் ஜெயராமன்

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

நீரியல் வல்லுனர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் சார்பில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்னர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் ஆய்வின் முடிவில் கிடைத்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதிகளை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த ஆக்கிரமிப்புகளால், விரைவில் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நித்யானந்த் ஜெயராமன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்