தமிழக செய்திகள்

வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது

மூன்றடைப்பு அருகே வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.

நாங்குநேரி:

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவை சேர்ந்த மாடக்கண்ணன் மனைவி செல்வமணி (வயது 30). இவரும், இவரது கணவரும், தாய் பிச்சம்மாள் ஆகியோரும் மூன்றடைப்பு அருகே உள்ள பனையங்குளம் கிராமத்தில் கொடை விழாவிற்காக உறவினர் சுப்பையா வீட்டிற்கு கடந்த 24-ந் தேதி வந்திருந்தனர். விழா முடிந்து ஊருக்கு புறப்படுவதற்காக கொண்டு வந்த பொருட்களையும், நகைகளையும் பாதுகாப்பாக பேக்கிங் செய்தனர். இந்தநிலையில் நேரம் அதிகமாகி விட்டதால் அங்கேயே மீண்டும் தங்கி நேற்று காலை ஊருக்கு புறப்பட தயாராகினார்கள்.

அப்போது அவர்கள் பையில் வைத்திருந்த நகையை பார்த்தபோது அதில் இருந்த 22 பவுன் நகைகள் மாயமாகின. இதனால் அதிர்ச்சியடைந்து அவர்கள் உடனடியாக மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் மூன்றடைப்பு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சுப்பையா மனைவி முத்துலட்சுமி (45) நகைகளை எடுத்து மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...