தமிழக செய்திகள்

குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண் கைது

குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள குத்தனூர் எம்.ஜி.ஆர். தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்பதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்த மகேஸ்வரி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு