தமிழக செய்திகள்

ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி

தினத்தந்தி

ஆவடி, 

ஆவடியை அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி பாஸ். இவருடைய மனைவி ரம்யா (வயது 37). இவர்களுக்கு துவாரகேஸ் (13) என்ற மகனும், தனன்யா (10) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை இவர்களது மகளுக்கு வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினர். பின்னர் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற ரம்யா, அதன்பிறகு மாயமானார். அவரது தோழி வீட்டுக்கும் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ரம்யாவை காணவில்லை.

இந்தநிலையில் ஆவடி-அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு ரம்யா பிணமாக கிடந்தார். ஆவடி ரெயில்வே போலீசார் ரம்யா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யா தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து