தமிழக செய்திகள்

கழுத்தை நெரித்து பெண் கொலை

வாணியம்பாடி அருகே விறகு சேகரிக்க சென்ற பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தினத்தந்தி

விறகு சேகரிக்க

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மங்கம்மாள் (51). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். பின்னர் சமைப்பதற்கு தேவையான விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள காப்பு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பெண் பிணம்

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் மங்கம்மாளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று பிற்பகல் காட்டு பகுதி வழியாக சென்ற நபர் ஒருவர், காட்டில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

கழுத்தை நெரித்து கொலை

விசாரணையில் இறந்து கிடந்தது மங்கம்மாள் என்பது தெரிய வந்தது. அவர் காதில் அணிந்திருந்த கம்மல், தாலி மற்றும் செல்போன் காணாமல் போய் இருந்தது.

அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு