தமிழக செய்திகள்

மாங்காடு அருகே கார் மோதி பெண் பலி

மாங்காடு அருகே கார் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52). இவருடைய மனைவி சங்கரி (48). இவர்கள் மண் பானைகள் செய்து விற்பனை செய்து வந்தனர். நேற்று சங்கரி, பானைகளை விற்பனை செய்வதற்காக அவற்றை தலையில் சுமந்து கொண்டு சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

கோவூர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சங்கரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கிஷோர் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...