தமிழக செய்திகள்

2 குழந்தைகளுடன் பெண் மாயம்

2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் யாதவர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி அமலா (33). இவர்களுக்கு வசுதாராணி (7) என்ற மகளும், பிரகதீஸ்வரன் (5) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் அமலா தனது குழந்தைகளுடன் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர்கள் 3 பேரும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அமலா மற்றும் குழந்தைகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்