தமிழக செய்திகள்

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தினத்தந்தி

சென்னை தண்டையார்பேட்டை ரெட்டை குழல் தெருவை சேர்ந்தவர் இளையராணி. இவருடைய 17 வயது மகன், 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திடீரென இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையில் சிறுமி மட்டும் அவளது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டாள். ஆனால் இளையராணியின் மகன் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன இளையராணி, தனது மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி தண்டையார்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார், அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அவரது உடலிலும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் இதுபற்றி விசாரிப்பதாக கூறி இளைய ராணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை