தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள எண்ணேகொள்புதூரை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 31-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் இட்டிக்கல் அகரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து சின்னராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.