தமிழக செய்திகள்

தொழிலாளி வீட்டில் திருட்டு

போடியில் தொழிலாளி வீட்டில் திருடியரை போலீசார் தேடி வருகின்றனர்

தினத்தந்தி

போடி முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவர் நேற்று மவேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவரது மனைவி சிவகாமி போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த சிவமணி என்பவர் வீடு புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர் 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்