தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

தினத்தந்தி

ஆத்தூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா ஆற்றுப்பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 42). இவர் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மழை பெய்த போது அவர் தங்கியிருந்த குடிசையின் மேலே போடப்பட்டிருந்த தகரத்தில் இருந்து தண்ணீர் ஒழுகியது. சம்பவத்தன்று அதை சரி செய்யும் பணியில் ராஜா ஈடுபட்டார். அப்போது எதிபாராத விதமாக மேலே சென்ற மின்சார வயர் மீது தகரம் பட்டது. இதில் ராஜா மீது மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து