தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு கத்திக்குத்து

நிலக்கோட்டை அருகே, தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள அவ்வையம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 59). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த ஜெகன், சின்னத்துரை ஆகியோர் தங்கள் நிலத்தில் இருந்து அருகே உள்ள மயான பகுதியில் மண்ணை கொட்டினர். இதனை வெள்ளைச்சாமி தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை கட்டையால் வெள்ளைச்சாமியை தாக்கியதாகவும், ஜெகன் கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் வெள்ளைச்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தார். தலைமறைவாக உள்ள ஜெகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு