தமிழக செய்திகள்

10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 27-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 27-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதன்படி, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது.

இதில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். 11-ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு முடிவு வெளியான பிறகு, துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு தேதி அறிவிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு