தமிழக செய்திகள்

இளம்பெண் சாவு

இளம்பெண் சாவில் சந்தேகம் என பாலீசில் புகார் செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திபாண்டியன். ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாபாரதி (வயது 22). இருவருக்கும் திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மகாபாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாபாரதியின் சகோதரர் கவிபாரதி திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்தார். அதில், தனது தங்கை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார். மகாபாரதிக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடமே ஆவதால் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு