தமிழக செய்திகள்

வேப்பேரியில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது

வேப்பேரியில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்யும் 32 வயதான பெண், நேற்று பணியின்போது நிறுவனத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது ஜன்னல் வழியாக அவரை, மர்மநபர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு சகஊழியர்கள் ஓடிவந்தனர். அவரை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்தது அவருடன் பணியாற்றும் சக ஊழியரான பாலாஜி (24) என்பது தெரியவந்தது.

இதுபற்றி அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இன்னும் திருமணம் ஆகாத பாலாஜி, திருமணம் ஆன அந்த பெண் மீது ஆசைபட்டதாக தெரிகிறது. கைதான பாலாஜியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்