தமிழக செய்திகள்

காதல் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்தவர் நவீன் (வயது 20). இவர், கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடிபோதைக்கு அடிமையான நவீன், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததுடன், காதல் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நதியா, கணவருடன் கோபித்துக்கொண்டு வியாசர்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த நவீன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்