தமிழக செய்திகள்

சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.

சிவகாசி ஓடைத்தெருவை சேர்ந்தவர் திருப்பதி மகன் முத்துக்குமார் (வயது 22). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அண்ணன் காளிராஜன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT