தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் நெடும்பரம் காலனியில் வசிப்பவர் பன்னீர்செல்வம். இவரது மகன் விசு (வயது 27). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் திருத்தணி பஜார் வீதிக்கு சென்று விட்டு, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

கனகம்மாசத்திரம் அடுத்த ரகுநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்த போது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த விசுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விசுவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி விசு பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த விசுவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு