தமிழக செய்திகள்

சென்னையில் ரெயில் மீது ஏறி விளையாடிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை கொருக்கு பேட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கொருக்கு பேட்டையில் சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடிய இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 19-வயதான இளைஞர் கவின் சித்தார்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மீது கவின் சித்தார்த்தின் கை பட்டுள்ளது. அடுத்த நொடியே மின்சாரம் உடலில் பாய்ந்து கவின் சித்தார்த் தூக்கி வீசப்பட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே கவின் சித்தார்த் உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரெயில்வே போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்