சென்னை,
தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் , ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த சகோதரி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
TNPSC குரூப் Iல் வென்று திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து கொண்டே UPSC எழுதி அதில் நாட்டிலேயே இரண்டாம் இடம் பெற்று இருப்பது மாபெரும் சாதனை. இவரைப் போலவே ஏ.ஆர். ராஜா மொகைதீன் 7-ஆம் இடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.. இந்த ஆண்டு இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ள 958 பேரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 60 பேர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.