செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் : திருவள்ளூரில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முடிவில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு மாவட்ட கலெக்டர் வாழ்த்துகளை தெரிவித்து அட்சதை தூவி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...