செய்திகள்

லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வாகனங்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 22-ந் தேதி அனைத்து வாகன உரிமையாளர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இதில் சங்கத்தலைவர் தெய்வமணி, செயலாளர் சேகர், பொருளாளர் ராமலிங்கம், சட்ட ஆலோசகர் வக்கீல் திலகராஜ், துணை செயலாளர் ஜெர்லின் ஜோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்