செய்திகள்

எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே துப்பாக்கிச்சூடு; 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வழியாக காரி த்ரயாத் காட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து, இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தனர். ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை