செய்திகள்

அமைதி ஒப்பந்தம் மூலம் தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது - ஈரான் கருத்து

அமைதி ஒப்பந்தம் மூலம் தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டதாக ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

அமெரிக்கா-தலீபான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஜரிப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நுழைந்திருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் நுழைந்து விட்டனர். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தினர். 19 ஆண்டுகால அவமானத்துக்கு பிறகு, தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது.

இருந்தாலும், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் செய்ததுபோல், ஆப்கானிஸ்தானிலும் பெரிய குழப்பத்தை உருவாக்கி விட்டுத்தான் அமெரிக்கா வெளியேறும். தலீபான்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்