செய்திகள்

காஷ்மீரில் ‘‘3 முன்னாள் முதல்வர்களை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்?’’ ப.சிதம்பரம் கேள்வி

காஷ்மீர் மாநிலத்தின் 3 முன்னாள் முதல்–மந்திரிகளை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தின் 3 முன்னாள் முதல்மந்திரிகளை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 6ந் தேதியில் இருந்து, 3 முன்னாள் முதல்மந்திரிகளுக்கும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? 2 பேர் தனிமை சிறையிலும், ஒருவர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய அரசியல் தலைவர்களை ஏன் அடைத்து வைக்கிறீர்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு