உலக செய்திகள்

அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் அறுந்து விபத்து - 15 பேர் படுகாயம்

அமெரிக்காவில் கேளிக்கை பூங்கா ஒன்றில் ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. வார விடுமுறையை முன்னிட்டு சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு சென்றிருந்தனர். அப்போது அதில் உள்ள ஒரு ராட்டினம் திடீரென அறுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கேளிக்கை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு