உலக செய்திகள்

ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்

ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி குழந்தைகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானின் மேற்கு மாகாணமான நராவில் 30-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.

கசிகரா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை அந்த பஸ் திடீரென இழந்தது. இதனால் எதிரே வந்த கனரக லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து