உலக செய்திகள்

அமெரிக்காவில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் பலி; 10 பேர் மாயம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் பலியானார்கள். 10 பேரை காணவில்லை.

தினத்தந்தி

புளோரிடா,

அமெரிக்காவின் தென்கிழக்கே அமைந்த புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியருகே சென்று கொண்டிருந்த படகு ஒன்று நேற்று மதியம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 2 பேர் பலியானார்கள். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்தில் காணாமல் போன 10 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த படகு எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றியும், படகில் பயணித்தவர்கள் எண்ணிக்கை பற்றியும், எங்கிருந்து வந்தவர்கள் என்பது பற்றியும் உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு வரை தேடுதல் பணி தொடர்ந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்