கோப்பு படம் 
உலக செய்திகள்

சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி; 3 பேர் மாயம்

தெற்கு சீனாவில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் ஜுஹாய் நகரில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், 5 தொழிலாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், ஜின்ஹாய் என்ற அந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதனால், பணியில் இருந்த தொழிலாளர்கள் கடலில் தவறி விழுந்துள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் தவிர 3 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என தெரியவரவில்லை.

தொழிலாளர்கள் 2 பேரின் உடல்கள் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. எனினும், காணாமல் போன 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என ஜுஹாய் நகராட்சியின் அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை