உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியானார்கள்.

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன்பின் சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறப்பட்டது. இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியானார்கள். அதற்கு முந்தைய நாள் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில், 108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த அறிகுறியும் இல்லாமல், புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்