உலக செய்திகள்

இந்தோனேசியாவில் புரளியால் கலவரம் பரவி 20 பேர் பலி

இந்தோனேசிய நாட்டில் புரளியால் ஏற்பட்ட கலவரத்திற்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.

ஜகர்த்தா,

இந்தோனேசிய நாட்டின் பப்புவா மாகாணத்தில் வாமினா நகரில் உயர்நிலை பள்ளியொன்றில் வேறு நகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பப்புவா நகரை சேர்ந்த மாணவரை கடந்த வாரம் குரங்கு என திட்டி விட்டார் என புரளி கிளம்பியது.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய போராட்டத்தில் அரசு கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த கலவரத்தில் வாமினா நகரில் வீடுகள் அல்லது கடைகளில் தீப்பற்றி எரிந்ததில் சிக்கி பொதுமக்களில் 16 பேர் பலியாகினர். வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதேபோன்று ஜெயபுரா பகுதியில் நடந்த மற்றொரு போராட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 3 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவருக்கு எதிராக இனவெறி சம்பவம் நடந்ததற்கான சான்று எதுவும் கண்டறியப்படவில்லை. மாணவர்களிடையே பொய்யான புரளிகள் பரவியுள்ளன. வன்முறையை ஏற்படுத்தவே உள்நோக்கத்துடன் பொய்யான தகவல் பரப்பப்பட்டு உள்ளது என நம்பப்படுகிறது என்று போலீஸ் அதிகாரி ரோட்ஜா கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு