உலக செய்திகள்

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பேரணியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் ரெட் ரிவர் நகரில் ஆண்டுதோறும் மோட்டார் சைக்கிள் பேரணி பிரபலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 41-வது ஆண்டு மோட்டார் சைக்கிள் பேரணி கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் கலந்து கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் சிதறி ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து