உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தங்கி இருந்த ஓட்டல் இடிந்ததில் 4 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் தங்கிய ஓட்டல் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவின் தென்கிழக்கே புஜியானில் குவாங்சு நகரில் லிசெங் பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 80 அறைகள் உள்ளன. இவற்றில் சில அறைகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை தங்க வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 71 பேர் சிக்கி உள்ளனர். அவர்களில் 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓட்டல் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இதன்பின் மீட்பு பணியில் 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தேடுதல் மற்றும் மீட்பு பணியினர் மற்றும் மீட்பு பணிகளுக்காக 7 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்