கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் நடந்த வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை 3 வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெர்டாஸ் பெரமர்ஸ் தெரிவித்தார்.

மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.