உலக செய்திகள்

இரையாக நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய கழுகு!!!

கழுகு ஒன்று தனது இரை என நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. #EagleAttack

தினத்தந்தி

ஐஸிக் குல்,

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் ஐஸிக் குல் என்ற இடத்தில் கோல்டன் கழுகுகளை வைத்து சிலர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் வேட்டைக்காரர்கள் ஏவிய கழுகு ஒன்று அந்த சிறுமி அருகில் பறந்து வந்தது. 6 அடி நீள சிறகுகளை விசிறியடித்தபடி வந்த அந்தக் கழுகு, தனது இரை என நினைத்து சிறுமியைத் தூக்கிச் செல்ல முயன்றது. அப்போது அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சிறுமியை காப்பாற்றினர்.

இதில் அந்த சிறுமிக்கு தலை, கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்