கோப்புப்படம்  
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கார் மீது வெடிகுண்டு வீசி 7 பேர் படுகொலை

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இதில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு வந்திருந்தவர்களில் சிலர் தங்களது காரில் புறப்பட்டனர். அப்போது அந்த பகுதி கவுன்சிலர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

இதில் கார் வெடித்து சிதறியதில் 7 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டனர். சிலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்