உலக செய்திகள்

பேஸ்புக் முடக்கத்தால் டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனர்கள்

பேஸ்புக் நிறுவனத்தின் முடக்கத்தால் 7 கோடி புதிய பயனர்களை டெலிகிராம் பெற்றிருப்பதாக அதன் சிஇஓ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

பேஸ்புக் மற்றும் அதற்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் கடந்த 4 ந் தேதி உலகளாவிய செயலிழப்பைச் சந்தித்தன. இந்த செயலிழப்பானது ஏறக்குறைய 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த நிலையில் உலக அளவில் பல லட்சம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஒரே நாளில் 7 கோடி புதிய பயனர்கள் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், ஒரே நேரத்தில் பலர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் அமெரிக்காவில் சில பயனர்கள் அதன் வேகம் குறைந்ததை உணர்ந்திருக்கலாம் ஆனாலும் பெரும்பாலான பயனர்களுக்கு வழக்கமாகவே வேலை செய்ததாக கூறினார்.

டெலிகிராம் உலகம் முழுவதிலுமிருந்து திடீரென அதிக பயனர்களைப் பெறுவது இது முதல் முறை அல்ல. வாட்ஸ்அப் தன்னுடைய புதிய தனியுரிமைக் கொள்கையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட போது கூட பல மில்லியன் கணக்கான பயனர்கள் டெலிகிராம் செயலியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்