உலக செய்திகள்

வங்காளதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் காலை 4.06 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

டாக்கா.

வங்காளதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 4.06 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 22.84 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.