*தென்கொரியாவில் 2022-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மூன் ஜே இன்னுக்கு எதிராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தவர் ஆன் ஹீ ஜங். இவர் தனது பெண் உதவியாளரை பல முறை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சியோல் மேற்கு மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.