உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 35 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர்.

தினத்தந்தி


* ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து கூறிய ஜனாதிபதி டிரம்புக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறிய கருத்துகள் மிக மிக தரம் தாழ்ந்தவை என்றும், இதன் மூலம் அவர் ஜனாதிபதி பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் அவர் கூறினார்.

* மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் நோய் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

* ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீரென மாயமானதாக கூறப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய பொருளை கடத்திய வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றியதாக ஈரான் புரட்சிகரப்படை தெரிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானின் பட்கிஸ் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புபடை வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 35 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர்.


முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு