உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

* ஊழல் வழக்கில், கைது நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்காவுக்கு தப்பியோடிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டொலிடோவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை பெருவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா வரும் அகதிகளுக்கு புதிய கட்டுப்பாட்டுகளை விதித்தது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

* ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பயங்கரவாத ஒழிப்பில் இருநாடுகளின் ஒத்துழைப்பு உள்பட இரு தரப்பு உறவு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

* அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு தொகுப்புகளை துருக்கி வாங்கியதால், அமெரிக்கா இனி அந்த நாட்டுக்கு எப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யாது என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம் துருக்கி உடனான உறவு சிறப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது